Breaking News

புதுச்சேரி மாநிலத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் பத்தாம் தேதி அனைத்து விதமான மது கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

 


புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரானன்ஸிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது.

 மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுவதாக கலால் துறை தெரிவித்துள்ளது.

No comments

Copying is disabled on this page!